ஜூன் 12: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

தமிழ்நாட்டில் இன்று 15 ஆயிரத்து 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-06-12 17:29 GMT
சென்னை,

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 15 ஆயிரத்து 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 39 ஆயிரத்து 705 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 73 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 27 ஆயிரத்து 463 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 48 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 374 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்:-

அரியலூர் - 98
செங்கல்பட்டு - 586
சென்னை - 989
கோவை - 1,982
கடலூர் - 349
தர்மபுரி - 241
திண்டுக்கல் - 196
ஈரோடு - 1,353
கள்ளக்குறிச்சி - 231
காஞ்சிபுரம் - 305
கன்னியாகுமரி - 444
கரூர் - 127
கிருஷ்ணகிரி - 266
மதுரை - 279
நாகை - 419
நாமக்கல் - 398
நீலகிரி - 415
பெரம்பலூர் - 84
புதுக்கோட்டை - 151
ராமநாதபுரம் - 115
ராணிப்பேட்டை - 237
சேலம் - 894
சிவகங்கை - 145
தென்காசி - 176
தஞ்சாவூர் - 645
தேனி - 219
திருப்பத்தூர் - 182
திருவள்ளூர் - 392
திருவண்ணாமலை - 338
திருவாரூர் - 261
தூத்துக்குடி - 296
திருநெல்வேலி - 196
திருப்பூர் - 844
திருச்சி - 420
வேலூர் - 190
விழுப்புரம் - 372
விருதுநகர் - 273

மொத்தம் - 15,108

மேலும் செய்திகள்