கொரோனாவுக்கு 2 பேர் பலி
தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர்.
தேனி :
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று 196 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்து 740 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 508 பேர் நேற்று குணமாகினர்.
தற்போது இந்த வைரஸ் பாதிப்புடன் 1 ஆயிரத்து 794 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பாதிப்புடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தேனி பகுதியை சேர்ந்த 62 வயது மூதாட்டி, 53 வயது பெண் ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 458 ஆக உயர்ந்தது.