மேலும் 91 பேருக்கு கொரோனா

அரியலூரில் மேலும் 91 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-13 19:24 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 91 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 13,619 ஆக உயர்ந்துள்ளது. இதில் 170 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 12,420 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 164 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 1,029 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்