கொரோனாவுக்கு 4 பேர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 82 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 72, 47 வயதுடைய ஆண்கள் 2 பேரும், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 55 வயதுடைய ஆண் ஒருவரும், தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 65 வயதுடைய மூதாட்டியும் என மொத்தம் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 181 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 928 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.