அறந்தாங்கி, ஜூன்.16-
அறந்தாங்கி கோபாலசமுத்திரத்தை சேர்ந்தவர் ஆல்வின் (வயது 21). கூலி தொழிலாளியான இவரை நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியும், பீர்பாட்டிலால் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஆல்வின் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்வர் (24), முகமது ஆசிப் (24), ஆசீப்கான் (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
அறந்தாங்கி கோபாலசமுத்திரத்தை சேர்ந்தவர் ஆல்வின் (வயது 21). கூலி தொழிலாளியான இவரை நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியும், பீர்பாட்டிலால் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஆல்வின் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்வர் (24), முகமது ஆசிப் (24), ஆசீப்கான் (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.