பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வள்ளியூர்:
வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் மற்றும் போலீசார் ஊரடங்கு உத்தரவு காரணமாக வள்ளியூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வள்ளியூர் அருகே உள்ள தேரைகுளம் உலகம்மன் கோவில் வயல்வெளி பகுதியில் சீட்டு விளையாடி கொண்டிருந்தவர்கள் போலீசார் வருவதை அறிந்து ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரனை நடத்தினர்.
விசாரணையில் தேரைகுளத்தை சேர்ந்த முருகன் (வயது 48), கோபால் (33), அய்யப்பன் (27) ஆகியோர் பணம் வைத்து சீட்டு விளையாடியது தெரியவந்தது. இதையடுத்து முருகன், கோபால், அய்யப்பன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.