இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பாளையங்கோட்டையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
பாளையங்கோட்டை தியாகராஜ நகரை சேர்ந்தவர் பாலு. இவருடைய மனைவி ஞான வின்சிகா (வயது 26). குடும்ப பிரச்சினை காரணமாக ஞான வின்சிகா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.