இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
விருதுநகரில் இளம்ெபண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்,
விருதுநகர் மேல தெருவை சேர்ந்தவர் கண்ணன். இட்லி கடை நடத்தி வரும் இவரது மனைவி உஷா (வயது 24). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தையும், 1½ வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கண்ணன் தினசரி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை கண்ணன் குடித்துவிட்டு வந்த நிலையில் உஷா அவரை கண்டித்துள்ளார். இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. தொடர்ந்து கண்ணன் வெளியே சென்றவுடன் உஷா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி உஷாவின் தாயார் மல்லாங்கிணறை சேர்ந்த சின்ன பூச்சம்மாள் (42) கொடுத்த புகாரின்பேரில் இந்நகர்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. விசாரணைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.