விபத்தில் வாலிபர் பலி
கல்லிடைக்குறிச்சியில் விபத்தில் வாலிபர் பலியானார்.
சேரன்மாதேவி:
கல்லிடைகுறிச்சி கேட்டு வாசல் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் பச்சையப்பன் (வயது 22). இவர் நேற்று மாலை வீரவநல்லூரில் இருந்து கல்லிடைக்குறிச்சி நோக்கி மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது கல்லிடைக்குறிச்சியில் இருந்து சேரன்மாதேவி நோக்கி ஒரு மினி லோடு ஆட்டோ வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மொபட்-மினி லோடு ஆட்டோ மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த பச்சையப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பச்சையப்பன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.