சரக்கு வேன்-லாரி மோதல்; சிறுவன் பலி

மணமேல்குடி அருகே சரக்கு வேன் மீது லாரி மோதியதில் சிறுவன் பலியானான்.

Update: 2021-06-16 17:42 GMT
மணமேல்குடி, ஜூன்.17-
மணமேல்குடி அருகே சரக்கு வேன் மீது லாரி மோதியதில் சிறுவன் பலியானான். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருமணம்
மணமேல்குடியை அடுத்த செய்யானம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). இவர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கண்டிச்சங்காடு பகுதியை சேர்ந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சரக்கு வேனில் குடும்பத்துடன் சென்றுள்ளார்.
திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன் அதே வேனில் திரும்ப ஊருக்கு வந்துள்ளனர். வேனை அன்பரசன் என்பவர் ஓட்டி வந்தார். அம்மாபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது, அந்த வழியாக வந்த லாரி சரக்கு வேனில் மோதியது.
சிறுவன் சாவு
இந்த விபத்தில் சரக்குவேனில் இருந்த வர்ஷா கார்த்திகேயன் (12) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தான். மேலும் இந்த விபத்தில் ஆறுமுகம், டிரைவர் அன்பரசன், கிருஷ்ணன் (55), சுசிலா (50) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மணமேல்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்