அடையாளம் தெரியாத ஆண் பிணம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அடையாளம் தெரியாத ஆண் பிணத்தை போலீசார் மீட்டனர்.

Update: 2021-06-16 18:23 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்