நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் பலி

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் பலியாகினர்.

Update: 2021-06-16 18:32 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா உயிரிழப்பு தினமும் பதிவாகி வந்தது. இதனிடையே நேற்று முன்தினம் கொரோனாவுக்கு மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த யாரும் உயிரிழக்கவில்லை. இது பொதுமக்களுக்கு சற்று ஆறுதல் தரும்  தகவலாக இருந்தது.
இந்தநிலையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த ராசிபுரம், நாமக்கல், காவக்காரபட்டி, திருச்செங்கோடு, பாலப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 6 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 363 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்