மானூர்:
மானூரைச் சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 78). விவசாயியான இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த ஏசுதாசன் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.