பெரம்பலூரில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

பெரம்பலூரில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர்

Update: 2021-06-16 21:21 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தநிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மூதாட்டி ஒருவரும், 58 வயது ஆண் ஒருவரும், சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 27 வயது வாலிபர் ஒருவரும் என 3 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 109 பேர் நேற்றைய தினம் குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 610 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும் செய்திகள்