கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி 207 பேர் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி 207 பேர் பாதிப்பு

Update: 2021-06-17 00:09 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள். 207 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 கொரோனா
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 50 வயது ஆண், 55 வயது ஆண், 57 வயது ஆண் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும், 54 வயது ஆண் தர்மபுரி அரசு மருத்துவமனையிலும், 65 வயது முதியவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலும் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டனர். 
அதன்படி நேற்று ஒரே நாளில் 5 பேர் இறந்தனர். அத்துடன் மாவட்டத்தில் நேற்று 207 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 220 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 37 ஆயிரத்து 827 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
சிகிச்சை
இதில் 35 ஆயிரத்து 512 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 46 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்