மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போலீசில் புகார்

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

Update: 2021-06-17 18:38 GMT
கரூர்
கரூர் வெண்ணைமலை பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 26). இவர் பசுபதி பாளையத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதேபோல் கரூர் சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (37). இவர் தனது மோட்டார் சைக்கிளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளையும் மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து முத்துவேல், செல்லத்துரை ஆகியோர் தனித்தனியாக பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்