சிவகாசி,ஜூன்.
திருத்தங்கல் போலீசார் ஈஞ்சார்-சாமிநத்தம் ரோட்டில் உள்ள செந்தட்டி அய்யனார் கோவில் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி (வயது 51), முருகன் (48), துரைப்பாண்டி (36), பூமிநாதன் (40) ஆகியோர் காசு வைத்து சூதாடியது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.8,900 பணத்தை பறிமுதல் செய்தனர்.