மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அம்பையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-17 19:10 GMT
அம்பை:

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மாநில அரசுகளுக்கு தட்டுப்பாடின்றி கொரோனா தடுப்பூசி வழங்க கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், அம்பை கல்யாணி திரையரங்கம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெகதீஷ், நிர்வாகிகள் முருகன், பலவேசம், முத்துமாரி, சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்