குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-17 19:32 GMT
நெல்லை:

நெல்லை அருகே உள்ள மோகனூர் வடக்கு தெருவை சேர்ந்த வேல்சாமி மகன் சுரேஷ் என்ற சுரேஷ் குமார் (வயது 31). இவர் மீது மானூர் போலீஸ் நிலையத்தில் அடிதடி‌ மற்றும் கொலை முயற்சி வழக்கு உள்ளது.

இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் விஷ்ணு இந்த பரிந்துரையை ஏற்று சுரேஷ்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து மானூர் போலீசார், நேற்று சுரேஷ் குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

இதே போல் மானூர் அருகே உள்ள திருமலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுடலை மகன் பெரியசாமி (38). கள்ளசாராய வழக்கில் மானூர் போலீசார் இவரை கைது செய்தனர். இவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான கலெக்டர் உத்தரவிட்டதை தொடர்ந்து, மானூர் போலீசார் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

மேலும் செய்திகள்