பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-17 20:44 GMT
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் அழகுதுரை. இவரது மனைவி புவனேஸ்வரி(வயது 21). இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை வருடமாகிறது. குழந்தை இல்லை. நேற்று புவனேஸ்வரி அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். திருமணமாகி இரண்டரை வருடமே ஆவதால் வரதட்சணை கொடுமையில் அவர் இறந்தாரா என்று விசாரணை நடத்த அரியலூர் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்