ஆர்ப்பாட்டம்

திருவாடானையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-06-18 16:40 GMT
தொண்டி, 
திருவாடானையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா குழு சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் மங்கலக்குடி தலைமை தாங்கினார். இதில் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப் பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமு, தாலுகா குழு உறுப்பினர்கள் நாகநாதன், ஜெயகாந்தன், அருள்சாமி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்