வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

Update: 2021-06-18 17:18 GMT
கந்தர்வகோட்டை, ஜூன்.19-
கந்தர்வகோட்டை அருகே உள்ள காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் மதுபாலன் (வயது 25). இவர் 16 வயது சிறுவனை பாலியல் தொந்தரவு செய்து, அதை செல்போனில் வீடியோவாக பதிவிட்டு தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை செல்போனில் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் மதுபாலனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்