9 பேர் மீது வழக்கு

இளையான்குடியில் ஊரடங்கில் விதிமீறலில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

Update: 2021-06-18 18:53 GMT
இளையான்குடி,

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இளையான்குடியில் பல்வேறு இடங்களில் போலீசார் ஊரடங்கு விதிமுறைகளை யாராவது மீறுகிறார்களா? என கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் தேவையின்றி ஊர் சுற்றியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்