வழிப்பறி செய்ததாக பொய் புகார் கொடுத்த பட்டதாரி வாலிபர் கைது

வழிப்பறி செய்ததாக பொய் புகார் கொடுத்த பட்டதாரி வாலிபர் கைது

Update: 2021-06-19 17:02 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ராமு(வயது 28). பி.எஸ்சி. பட்டதாரியான இவர் சம்பவத்தன்று சோழ பாண்டிபுரம் சென்ற போது அதேகிராமத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன், தமிழ்வாணன், சக்திவேல் ஆகிய 3 பேரும் தன்னை வழிமறித்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.4,500 பணம் ஆகியவற்றை பறித்து சென்றதாக திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் ராமு கொடுத்த புகார் பொய் என்பது தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்