பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கைகோரி மனு

பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கைகோரி மனு கொடுக்கப்பட்டது.

Update: 2021-06-19 19:03 GMT
கரூர்
கரூர் மாவட்டம் வீரராக்கியம் அருகே உள்ள நடராஜபுரம் காலனியில் வசித்து வரும் இலங்கையை சேர்ந்தவர்கள் சிலர் நேற்று கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு ெகாடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் கடந்த 40 வருடங்களாக 10 குடும்பத்தை சேர்ந்த 50 பேர் மேற்கண்ட பகுதியில் வசித்து வருகிறோம். சில சமூக விரோதிகள் கடந்த 18-ந்தேதி இரவில் எங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு, தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்