முககவசம் அணியாத 467 பேருக்கு அபராதம்
நெல்லை மாவட்டத்தில் முககவசம் அணியாத 467 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லைL:
நெல்லை மாவட்டத்தில் நேற்று கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 467 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத ஒருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.