கொரோனாவுக்கு மேலும் 2 பெண்கள் பலி

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-06-19 19:58 GMT
பெரம்பலூர்:

2 பெண்கள் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 59 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 61, 45 வயதுடைய பெண்கள் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 113 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 401 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 752 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது.
தடுப்பூசி
மாவட்டத்தில் நேற்று கோவாக்சின் தடுப்பூசி இல்லாததால் கோவிஷீல்டு தடுப்பூசி 3,513 பேருக்கு போடப்பட்டுள்ளது. இதனால் கோவாக்சின் 2-வது தவணை போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 80,133 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 1,510 கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் கையிருப்பில் உள்ளது. கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பில் இல்லை.

மேலும் செய்திகள்