மகன் இறந்த மறுநாளே மின்னல் தாக்கி தந்தை சாவு

மகன் இறந்த மறுநாளே மின்னல் தாக்கி தந்தை சாவு

Update: 2021-06-20 19:04 GMT
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே காரையூர் புதுவளவு கிராமத்தைச் சேர்ந்தவர் சேவுகன். இவரது மகன் சின்னத்தம்பி(வயது 43). இவர் சுமார் 10 ஆண்டுகளாக சவுதியில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் வேலை செய்யும் இடத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கி இருந்தனர். மேலும் அவரின் உடலை கிராமத்திற்கு கொண்டு வர முயற்சி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் ஓய்வுபெற்ற தூய்மை பணியாளரான சேவுகன்(70) ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். அவர் ஆடுகள் மேய்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது செட்டி கண்மாய் பகுதியில் வந்தபோது மின்னல் தாக்கியதில் அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து கண்டவராயன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறனர்.  ஒரே வீட்டில் அடுத்தடுத்து தந்தை, மகன் இறந்ததால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியது. சின்னதம்பிக்கு ராமு என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

மேலும் செய்திகள்