அண்ணியை தாக்கியவர் கைது

அண்ணியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-20 21:03 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூரை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 60). இவரது தம்பி ராஜேந்திரன்(50). இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது செல்வராஜின் மனைவி செல்வியை, ராஜேந்திரன், அவரது மனைவி பாப்பாத்தி, மகன் தினேஷ் ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த செல்வி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்மனர். பாப்பாத்தி, தினேஷ் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்