கஞ்சா கடத்திய சிறுவன் கைது

திசையன்விளையில் கஞ்சா கடத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-21 22:06 GMT
திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை புறவழிச்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது அவர்கள், அரசால் தடை செய்யப்பட்ட ¼ கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. அதை போலீசார் கைப்பற்றி, இதுதொடர்பாக 16 வயது சிறுவனை கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்