படப்பை அருகே ஏரியில் மூழ்கி டிரைவர் சாவு

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 37). கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.

Update: 2021-06-22 10:47 GMT
ஏரியில் மூன்று பேரும் குளித்துக்கொண்டிருந்த போது, நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக ராமகிருஷ்ணன் நீரில் மூழ்கி மாயமானார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் இருவரும் மணிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய டிரைவரின் உடலை தேட ஆரம்பித்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில் ராமகிருஷ்ணன் மது அருந்திவிட்டு ஏரியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பலியானதாக கூறப்படுகிறது. இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்