திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒரு நாள் பாதிப்பு 200-க்கும் கீழ் குறைந்தது

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 197 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2021-06-22 11:37 GMT
இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 9 ஆயிரத்து 688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 38 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 991 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,659 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 6 பேர் இறந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்