கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-06-22 19:47 GMT
அரியலூர் மாவட்டத்தில்
கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி
அரியலூர், ஜூன்.23-
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 71 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 75, 68, 64, 60, 50 வயதுடைய ஆண்கள் 5 பேரும், 80 வயதுடைய மூதாட்டி ஒருவரும் என மொத்தம் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 111 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 544 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 822 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. மாவட்டத்தில் நேற்று 3,025 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்