இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகிரி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், தமிழக மக்களுக்கு தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைக்க வலியுறுத்தியும் சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பஸ்நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.