கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 122 பேருக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 122 பேருக்கு கொரோனா

Update: 2021-06-23 16:41 GMT
கள்ளக்குறிச்சி 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 26 ஆயிரத்து 126 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24 ஆயிரத்து 732 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 190 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

 இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 750 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 122 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 126-ல் இருந்து 26 ஆயிரத்து 248-ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்