கார் மோதி முதியவர் சாவு

மானாமதுரை அருகே கார் மோதி முதியவர் பலியானார்.

Update: 2021-06-24 08:30 GMT
மானாமதுரை,

மானாமதுரை அருகே ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 70). இவர் மானாமதுரையில் இருந்து ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மூங்கில் ஊராணி அருகே சென்ற போது எதிரே வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீேழ விழுந்த ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மானாமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்