தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

தனியார் ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-06-24 15:50 GMT
ராமநாதபுரம், 
சோழந்தூர் அருகே உள்ள சீனாங்குடி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் என்பவரின் மகள் மனிஷா (வயது19). இவர் ராமநாதபுரம் அரண்மனை அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் மருந்தக பிரிவில் பணியாற்றி வந்தார். நீண்ட நாட்களாக மன உளைச்சல் அடைந்திருந்த மனிஷா நேற்று பிற்பகலில் ஆஸ்பத்திரி மாடியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் பஜார் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனிஷாவின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்