31 பேருக்கு கொரோனா

31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-06-26 15:57 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 31 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 19 ஆயிரத்து 545 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 82 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 18 ஆயிரத்து 877 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 338 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 330 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்