மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி

கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

Update: 2021-06-26 16:56 GMT
கோவில்பட்டி:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமை நலச்சங்கம் சார்பில் கோவில்பட்டியில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி நகரசபை அலுவலகம் முன்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் முருகன், பிளம்பர் கண்ணன் தலைமை தாங்கினர். மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, காய்கறி தொகுப்பை நகரசபை சுகாதார ஆய்வாளர் சுரேஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் இமான், ஒன்றிய பொறுப்பாளர் சந்திரன், அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்