மது விற்றவர் கைது; 80 மதுபாட்டில்கள் பறிமுதல்

உடையார்பாளையம் அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-27 18:02 GMT
உடையார்பாளையம்,

உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் அப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சூரியமணல் கிராமத்தை சேர்ந்த ராஜாராம்(வயது 39), இடையார் பிரிவு ‌சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து ராஜாராமை கைது செய்து அவரிடம் இருந்த 80 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்