கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 82, 75, 44 வயதுடைய ஆண்கள் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 204 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 61 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 604 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் 486 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. நேற்று 1,187 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.