காரிமங்கலம் அருகே காதலன் திட்டியதால் பட்டதாரி பெண் தற்கொலை உடலை எரிக்க முயன்றதால் பரபரப்பு

காரிமங்கலம் அருகே காதலன் திட்டியதால் பட்டதாரி பெண் தற்கொலை உடலை எரிக்க முயன்றதால் பரபரப்பு

Update: 2021-06-28 18:12 GMT
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே உள்ள வண்டிக்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மகள் ஜெயசூர்யா (வயது23). பட்டதாரியான இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவரும், அதே நிறுவனத்தில் பணிபுரிந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலன், ஜெயசூர்யாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜெயசூர்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஜெயசூர் யாவின் உடலை எரிக்க முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த பெண்ணின் உடலை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயன்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏறங்பட்டது.
=======

மேலும் செய்திகள்