தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-29 10:59 GMT
நெய்க்காரப்பட்டி:
பழனி அடுத்த வி.கே.மில் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 36). கூலித்தொழிலாளி. இவருக்கு பவித்ரா (வயது 32) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். பிரபு அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதில் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்