அறந்தாங்கி, ஜூன்.30-
அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் பொற்குடையார் கோவில் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில் களப்பக்காட்டை சேர்ந்த மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் மதன்குமார் (வயது 30), பச்சலூரை சேர்ந்த முருகன் (24) ஆகியோர் கஞ்சா எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.12 ஆயிரத்து 500 மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் எல்.என்.புரம் சின்ன அண்ணா நகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த சின்ன அண்ணா நகரை சேர்ந்த சகுந்தலா (33), காந்தி நகர் மணிமாறன் (19), எல்.என்.புரத்தை சேர்ந்த மணிகண்டன் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரத்து 500 மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் பொற்குடையார் கோவில் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில் களப்பக்காட்டை சேர்ந்த மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் மதன்குமார் (வயது 30), பச்சலூரை சேர்ந்த முருகன் (24) ஆகியோர் கஞ்சா எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.12 ஆயிரத்து 500 மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் எல்.என்.புரம் சின்ன அண்ணா நகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த சின்ன அண்ணா நகரை சேர்ந்த சகுந்தலா (33), காந்தி நகர் மணிமாறன் (19), எல்.என்.புரத்தை சேர்ந்த மணிகண்டன் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரத்து 500 மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.