சூதாடிய 4 பேர் கைது

சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-29 18:09 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்செல்வம் தலைமையிலான போலீசார் கேணிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு ஓட்டலின்பின்புற பகுதியில் சிலர் பணம் வைத்து உள்ளே வெளியே சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் ராமநாதபுரம் சாயக்காரத்தெரு சசிக்குமார் (வயது45), கேணிக்கரை  முகம்மதுஅலி ஜின்னா (51).  ஷாஜகான் (46), அருப்புக்காரத்தெருசதாம்உசேன் (43) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சீட்டு விளையாட பயன்படுத்திய ரூ.13 ஆயிரத்து 200-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்