வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2021-06-29 20:39 GMT
கூடங்குளம்:
கூடங்குளம் மேலத்தெரு பணத்தோட்டம் பகுதியை சேர்ந்த தங்கபாண்டி மகன் சத்யராஜ் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவர் அடிக்கடி மதுபோதையில் மனைவி முத்துக்கனி மற்றும் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் மது போதையில் மனைவியிடம் சத்யராஜ் தகராறு செய்தார். பின்னர் அனைவரும் தூங்கச் சென்ற பிறகு வீட்டின் பின்புறம் உள்ள பூவரசு மரத்தில் சத்யராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளை மன்னர் ராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் பிரபாகர் (29). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்