வேன்-மோட்டர் சைக்கிள் மோதல்

வேன்-மோட்டர் சைக்கிள் மோதல்-3 பேர் படுகாயம்

Update: 2021-07-01 18:12 GMT
விருதுநகர்
விருதுநகர் இந்திராநகரை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 42). இவரும், மாணிக்கம்நகரைச் சேர்ந்த தேவதாஸ்(53) மற்றும் சிவகாசியை சேர்ந்த சங்கரபாண்டியன்(30) ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் வடமலைக்குறிச்சிக்கு தச்சு வேலைக்காக சென்று கொண்டிருந்தனர். விருதுநகர் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது மதுரையிலிருந்து வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி முத்துக்குமார் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த மலைராஜ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்