கணவருக்கு வேறு பெண்ணுடன் பழக்கம்: பெண் விஷம் குடித்து தற்கொலை

கணவருக்கு வேறு பெண்ணுடன் பழக்கம் இருந்ததால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-01 18:45 GMT
கிருஷ்ணகிரி:

வேறு பெண்ணுடன் பழக்கம்
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆலப்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி ஆனந்தி (வயது 21). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகனும், மகளும் உள்ளனர். முத்துராஜூக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்தது. இதுகுறித்து அறிந்த ஆனந்தி கணவரிடம் கேட்டுள்ளார். 
குடும்ப தகராறு
இதனால் கணவன்-மனைவி இடையே குடு்ம்ப தகராறு ஏற்பட்டது. இதி்ல் மனமுடைந்த ஆனந்தி கடந்த 30-ந் தேதி விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் ஆனந்தி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் ஆனந்தி பரிதாபமாக இறந்தார். 
வழக்குப்பதிவு 
இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்