கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-01 19:14 GMT
திருச்சி
திருச்சி
திருச்சி உறையூர் குறத்தெரு படிப்பகம் அருகே கஞ்சா விற்கப்படுவதாக உறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனியாகாந்தி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த உறையூர் விவேகானந்தர் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்