மரத்தில் இருந்து தவறி விழுந்த கரடி சாவு

மரத்தில் இருந்து தவறி விழுந்த கரடி சாவு.

Update: 2021-07-02 15:39 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழ சீசன் நிலவி வருகிறது. பலாப்பழங்களை தின்பதற்காக கரடிகள் முகாமிட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரி அருகே மெட்டுக்கல் கண்டிப்பட்டி ஆதிவாசி கிராமத்தில் உள்ள ஒரு பலா மரத்தில் பழங்களை தின்பதற்கு கரடி ஒன்று ஏறியது. அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த கரடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக சோலூர்மட்டம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நீலகிரி மாவட்ட உதவி வன அலுவலர் சரவணகுமார், கோத்தகிரி வனச்சரகர் சரவணன், வனவர் திருமூர்த்தி, வனக்காப்பாளர் செல்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த கரடியை பார்வையிட்டனர்.

 பின்னர் கால்நடை டாக்டர் ராஜன் வரவழைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து உடல் அதே பகுதியில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இறந்து கிடந்தது 4 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி. மரத்தில் இருந்து கீழே விழுந்ததால் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்து உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்